Sunday, November 16, 2008

நீதி வாழ்வது இந்தோனேஷியாவில் மட்டும் தானா?

2002 ம் ஆண்டு இந்தோனஷியாவின் புகழ் பெற்ற உல்லாச புரியான பாலி தீவில் உள்ள ஒரு இரவு கேளிக்கை விடுதியில் நடை பெற்ற குண்டு வெடிப்பில் 202 பேர் கொல்லப்பட்டனர். அவர்களில் 160 பேர் வெளி நாட்டவர்கள். விடுமுறையை உல்லாசமாக கழிப்பதற்காக அழகு கொஞ்சும் பாலித்தீவிற்கு வந்தவர்கள். அதிக பட்சமாக ஆஸ்த்திரேலிய நாட்டைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டனர். சில அமெரிக்கர்களும் கொல்லப்பட்டார்கள். இந்த வன்முறை சம்பவத்திற்கு காரணமானவர்களை கண்டு பிடிக்கும் புலன் விசரணையில் இந்தோனேஷிய அரசு வெற்றி கண்டு மூன்று குற்றவாளிகளை நீதி மன்றத்தின் முன் நிறுத்தியது.

படத்தில் காணும் "இமாம் சமுத்திரா, அம்ரோஸி, மற்றும் முக்லாஸ்" என்கிற மூவருக்கும் அந்நாட்டு நீதிமன்றம் அதிக பட்ச தண்டனையான மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. மரண தணடனை நவம்பர் 9 - 2008 ல் இந்தோனேஷியாவில் நிறைவேற்றப்பட்டது.

இந்திய அரசுக்கு நான் கேட்க விரும்பும் சில கேள்விகள்:

1. மண்புமிகு மந்திரியோரே, இந்தோனஷியாவில் என்ன நடந்தது, எதற்காக இந்த மூவருக்கும் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

2. ஒரு இஸ்லாமியருக்கு அவரது சொந்த மண்ணிலேயே தீவிரவாதத்திற்கு துணைபோனதற்காக பாரபட்சமில்லாமல் அதிகபட்ச தண்டனை வழங்கியதன் மூலம் நீதி இன்னும் இந்தோனேஷியாவில் வாழ்கிறது என்பதை அந்நாட்டு அரசும், நீதித்துறையும் உலகுக்கு உணர்த்தி உள்ளதை கண்டீர்களா?

3. உலகத்தின் மிகப்பெரிய இஸ்லாமிய நாடான இந்தோனேஷியா, எங்கள் மண்ணில் தீவிர வாதத்திற்கு ஊசிமுனையளவு கூட இடம் தர மாட்டோம் என உலகுக்கு எடுத்துச்சொல்லியுள்ளதை கண்டீர்களா?

4. தீவிரவாதத்திற்கு துணைபோனார் என்ற ஒரே காரணத்திற்காக இஸ்லாமிய அரசு கூட ஒரு இஸ்லாமியரை விட்டு வைக்கவில்லை பார்த்தீர்களா?

5. அப்படியிருக்க இந்திய பாரளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளியை நீதியின் முன் நிறுத்திய பொழுது, நீதி மன்றம் தீர விசாரித்து அவனுக்கு மரண தண்டனை அளித்த பின்பும் அதை நிறைவேற்றாமல் நிறுத்தி வைத்திருக்கிறீர்களே அதன் காரணம் என்ன?

6. இதே குற்றவாளி ஒரு இஸ்லாமியனாக இல்லாமல் வேற்று மதத்தை சார்ந்தவராக இருந்திருந்தாலும் கூட உங்களுக்கு இதே மாதிரி மனித நேயமும் கருணையும் பீரிட்டுக் கிளம்பி இருக்குமா?

7. கேவலம் இவ்வளவு தரம் தாழ்ந்த உங்களை காப்பதற்கென்று தங்கள் உயிரையும் துச்சமாக மதித்து போராடி, உயிர் விட்டார்களே அந்த கடமை தவறா பாதுகாவலர்கள், அவர்களது உயிர் தியாகத்திற்கு மதிப்பு கொடுக்கும் வண்ணமாகவாவது இந்த நீதிமன்றத்தீர்ப்பை ஒரு முறை உங்கள் ஓட்டு வங்கி அரசியலை விட்டு வெளியே வந்து வாசித்துப் பாருங்கள்.

8. இல்லையேல் இரண்டு தவறான முன்மாதிரியை நீங்கள் முன் வைக்கிறீர்கள்.

ஒன்று : ஒரு தீவிரவாதிக்கு இஸ்லாமிய நாட்டிலேயே அவன் இஸ்லாமியன் என்றும் பாராமல் தண்டனை அளித்ததன் மூலம். இந்தோனேஷியா தன்னை ஒரு தீவிரவாத எதிர்ப்பு நாடு என நிரூபித்து விட்டது. ஆனால் தீவிரவாதி ஒரு இஸ்லாமியன் என்ற ஒரே காரணத்துக்காக அவனது தண்டனையை ரத்து செய்ததின் மூலம், முதலாவது நீங்கள் கொண்டிருக்கும் மதச்சார்பின்மைக் கொள்கை மிகவும் போலியான்து என்று நிரூபிப்பதோடு நின்று விடவில்லை நீங்கள், ஒரு இஸ்லாமியன் என்னும் போர்வையில் எந்த வகையான தீவிரவாத செயலையும் இந்திய மண்ணில் சர்வ சாதாரணமாக செய்துவிட்டு தப்பிக்க முடியும் என்று உலகுக்கு உணர்த்தி விட்டீர்கள்.

இரண்டு : நீங்கள் பால்வார்த்து வளர்க்கிறீர்களே, இந்த போலி மதச்சார்பின்மை என்ற போர்வையில் ஒரு தீவிரவாத நாகத்தை, அந்த விஷப்பாம்பு உங்களைக் கொத்த அடுத்த முறையும் கண்டிப்பாக வரும். ஆனால் அப்பொழுது உங்களைக் காக்க ஒரு அடி எடுத்து வைக்க கூட எந்த பாதுகாவலனும் ஆயிரம் முறை யோசிப்பான். அப்படி யோசித்து முடிவெடுத்து, அடியெடுத்து வைப்பதற்குள், உங்களை அந்த நாகம் முழுதுமாய் விழுங்கியிருக்கும்.

1 comment:

R. பெஞ்சமின் பொன்னையா said...

சோதனைப் பின்னூட்டம்...